வியாழன், 22 ஆகஸ்ட், 2013

கவிதைகள்

கன்னிக்கவிஞனுக்கு


பல ஆண்டுக் கனவொன்று

நொடியொன்றில் நிறைவேறி அதனது

துண்டொன்று அடி நெஞ்சில்

வரைந்து விட்ட

இதமான கீறலொன்றால்

இள மனசின் சிறு கூடு

சிதறிச் சிதைந்து போயும்

சிக்கிச் சிதை குலைந்து

கசிகின்ற சென்னீரில்

கனத்துப் போயிற்று

என் மனம் .........!

கனவுக்கு கற்பம்

தரிக்க வைக்க இந்த கவிஞனுக்கும்

அவன் பிரசவித்த கவிகளுக்கும்

என்ன ஒரு

மறவீர உறவொன்று

பிறப்பிலேயே இருந்த

இருந்த  தென்று

புலமைக்கு தெரிந்த போது

முல்லைக்கேசன்





3 கருத்துகள்:

  1. உங்கள் கவிதைகள் அனைத்தும் உணர்ச்சிகள் பொருந்தியவையாக உள்ளன. மேலும் வளர வாழ்த்துக்கள், பல இணையத்தளங்களில் உங்கள் கவிதைகளை படித்துள்ளேன். மிக்க நன்று.

    அறிவழகன்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கவிதைகள் அனைத்தும் உணர்ச்சிகள் பொருந்தியவையாக உள்ளன. மேலும் வளர வாழ்த்துக்கள், பல இணையத்தளங்களில் உங்கள் கவிதைகளை படித்துள்ளேன். மிக்க நன்று.

    அறிவழகன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் அனைத்தும் சுப்பராக உள்ளது. வாழ்த்துக்கள்.

      லங்கேஸ்

      நீக்கு

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *