வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கிழித்த மார்புகள்


எம் மார்புகள் கிழித்த சன்னங்களுக்கு உடனே

மருந்துகள் போடுங்கள்

 
ஏனென்றால்

நாம் மனிதர்கள் அல்லர் வீர

மறவர்கள்

ஈழத்தின் வீரத் தமிழர்கள்



நெல்லரிசிச் சோற்றுக்கும் 

நெய்விட்ட

தோசைக்கும்

வயிற்றை வாடகைக்கு

தந்தவர்கள் தினம் நெருப்புக் குழம்புகளை

பிசைந்து தின்றவர்கள்

மானத் துணிகளில் விசிறிக் கோவணங்கள்


கட்டியவர்கள்

அதனால்த் தான் புழுங்கினேன்

சன்னங்களின் ஜீவனுக்காய்

மருந்துகள் போடென்று - பார்

என் நெஞ்சுகள் கிழித்திருக்கும்

நீலமும்

பாரித்திருக்கும்.


முல்லைக்கேசன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *